Friday, April 29, 2011

மொக்கை மினிட்ஸ்...

ல்லா வீட்டு ஓனர்களைப் போலவே, எங்க வீட்டு ஓனரும் கொஞ்சம் முசுடு. அவங்க இருக்கறது மேல் மாடி. நாங்க இருக்கறது கீழ. ஒரு தடவை மோட்டார் போட்டு விட்டு, டாங்க்ல தண்ணி நிறைஞ்சு, கீழ கொட்டி படி வழியா மாடில இருக்கர அவர் வீடு வரைக்கும் வந்துடுச்சு. அவ்ளோதான். அங்கிருந்து கத்த ஆரம்பிச்சாரு..

“குமார்.. குமார்..”

நான் என்னவோ நடந்துச்சுடா மாதவான்னு நெனைச்சுட்டே, ஐ.பி.எல்-லை ம்யூட்ல போட்டுட்டு ‘என்ன மாமா..’ன்னுட்டே போனேன்.
“இங்க பாருங்கோ.. இத மாதிரி பொறுப்பில்லாம இருக்கறதுன்னா நீங்க வீடைக் காலி பண்ணிக்கலாம். என்ன ஆச்சுன்னு பாருங்கோ”ன்னார். மேல போய்ப் பார்த்தேன். அவர் வீட்டு வாசல் வரைக்கும் தண்ணி. அப்பவும் என் மரமண்டைக்கு புரியல.

“இன்னைக்கு ஏதாவது விசேஷமா மாமா? இந்நேரத்துக்கு வாசல் தெளிச்சிருக்கீங்க?”ன்னு கேட்டேன். அவருக்கு இன்னும் சுர்ர்ர்ர்ன்னு ஏறிடுச்சு.

“உங்க விளையாட்டை உங்க பொண்ணுங்களோட வெச்சுக்கோங்க..”

“கரெக்ட்தான் மாமா. உங்க பொண்ணுகள்கிட்ட வெச்சுட்டா தப்பாய்டுமே…”ன்னு மனசுல நெனைச்சுட்டே சுதாரிச்சுட்டேன். “ஓ.. மோட்டார் ஆஃப் பண்ணலியா”ன்னு தலைல தட்டிகிட்டே போய் ஆஃப் பண்ணீட்டேன். மறுபடி அவர்கிட்ட வந்து “ஸாரி மாமா.. இனிமே இப்படி நடக்காது”ன்னுட்டு போய்ட்டேன்.

ரெண்டு வாரம் முன்னாடி உமாவும் குட்டீஸும் ஊருக்குப் போயிருந்தப்போ, மோட்டார் போட்டேன். உமா ஆயிரம் வாட்டி, “போட்டீங்கன்னா 15 நிமிஷத்துல ஆஃப் பண்ணிடுங்க. பாட்டு வாங்கிக்காதீங்க”ன்னு சொல்லிட்டுதான் போனாங்க. நானும் சுவிட்ச் ஆன் பண்ணீட்டு 15 நிமிஷம் என் மொபைல்ல அலாரம் செட் பண்ணீட்டு உட்கார்ந்தேன். வழக்கம்போல ஒரு பீரும், யுவன் ஷங்கர் ராஜாவும் என்னை எழுந்திருக்க விடாம பண்ணீட்டாங்க. கொஞ்ச நேரம் டியா டியா டோலு முடிஞ்சப்ப பாக்கறேன். 40 நிமிஷமாயிருந்தது. ஆஹா… விடமாட்டானே வெள்ளையத்தேவன்னு அவசர அவசரமா மோட்டரை ஆஃப் பண்ணீட்டு மாடிக்கு ஓடினேன்.

தண்ணி வழிஞ்சு மொட்டை மாடிபூரா பரவி, படிக்கட்டுக்கு பக்கத்துல வந்து நின்னுட்டிருந்தது. கொஞ்சம் இல்லைன்னா கீழ அப்டியே போயிருக்கும். அங்கயே நின்னுட்டு தண்ணி கீழ வராம தள்ளி விட்டுட்டு இருந்தேன். ஆறு மணியானா அவங்க எதுக்காவது மொட்டைமாடி வந்து, இதப் பார்த்தாலும் சண்டை போடுவாங்களேன்னு நெனைச்சுட்டிருந்தேன். ஒரு கட்டத்துல ‘போங்கடா.. என்னமோ ஆகட்டும்’ன்னு கீழ வந்துட்டேன்.

ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். ஹவுஸ் ஓவர் வண்டியை வந்து நிறுத்தறாரு. மேல போகப் போறாரு.. ஒரு சண்டை இருக்குன்னு நான் நெனைக்கறப்ப, இடிச்சது இடி. அடிச்சது மின்னல். கொட்டிச்சு மழை!

தப்பிச்சேன்டா நான்!

--------------

வீட்ல எல்லாருமா உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கோம். தண்ணி குடிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஸ்ப்ரைட் பாட்டிலை மூடியைத் திறந்து வாய்க்குள்ள கொட்டினேன். நல்லெண்ணை!

அடச்சேன்னு ஆய்டுச்சு. அதுக்கப்பறம் தண்ணிக்குன்னு டப்பர்வேர் பாட்டில்ஸை ஸ்பெஷலா வாங்கினது தனி கதை.

இப்ப எல்லாரும் ஊருக்குப் போயிருந்தாங்கள்ல.. அப்பத்தான் கவனிச்சேன்.. எண்ணெய் பாட்டில்கள் வைக்கற ட்ரேல ஒவ்வொண்ணுலயும் பெரிசா வெள்ளை பேப்பர்ல குட்டீஸோட கையெழுத்துல ‘இது விளக்கெண்ணெய்’, இது நல்லெண்ணெய், ’இது தேங்காய் எண்ணெய்’-ன்னு எழுதப்பட்டிருந்தது.

அந்த பயம் இருக்கட்டும்!

-----------------


இதையெல்லாம் நீங்க செஞ்சிருக்கீங்களா?

என் ஃப்ரெண்டு ஒருத்தன். அவனோட மகன் பர்த்டே அன்னைக்கு அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். கேக் எல்லாம் சாப்ட்டுட்டு கெளம்பறப்ப அவன் ஃபேமலியோட புறப்பட்டுட்டு இருந்தான். ‘கோவிலுக்காடா’ன்னு கேட்டேன்.

“இல்ல மச்சி”-ன்னவன் ஒரு நர்சிங் ஹோம் பேரைச் சொல்லி “அங்க போறேன். இவனுக்கு அந்த டாக்டர்தான் பிரசவம் பார்த்தாங்க. இவனோட ஒவ்வொரு பர்த்டேக்கும் அந்த டாக்டரைப் பார்த்துட்டு சாக்லெட் குடுத்துட்டு வருவோம்”ன்னான்.

அட! நல்லா இருக்கே.. நாமளும் பண்லாமேன்னு நெனைச்சேன். நெனைச்சதோட சரி.. இதுவரைக்கும் பண்ல!

----------------


ஹாலிவுட் நடிகர் ஒருத்தர். பேர் நினைவில இல்ல. தன்னோட ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் அவரோட அப்பா அம்மாவைக் கூப்ட்டு வாழ்த்துச் சொல்லுவாராம்.

‘அது ஏன் அப்டி’ன்னு கேட்டதுக்கு அவரு சொன்னது: “யோசிச்சுப் பாருங்க.. என்னோட மொத பிறந்த நாளைக்கு எனக்கு யாராவது வாழ்த்துச் சொன்னாங்களா? அவங்களுக்குத்தானே சொல்லிருப்பாங்க எல்லாரும்? அதுக்கப்பறம் அவங்களுக்கு யாரும் சொல்றதில்ல.. எல்லாரும் எனக்குத்தான் சொல்றாங்க. அதுனாலதான் அவங்களுக்கு நான் சொல்றேன்”

நல்லாருக்கு இல்ல?.

------------------------

ந்த கம்பெனி கேண்டீன்ல கேஷ் கவுண்டர்ல எல்லாரும் முண்டியடிச்சுட்டுதான் நிப்பாங்க. வரிசையா நின்னாலும் தள்ளு முள்ளு பண்ணீட்டுதான் நிப்பாங்க. அதுவும் பலபேரு நார்த் இண்டியாலேர்ந்து வந்து வேலை பார்க்கறவங்க. எவ்ளோ சொன்னாலும் கேட்கறதில்ல. பார்த்தாரு அந்தக் கம்பெனி ஹெச். ஆர். மேனேஜர். அவங்க க்யூவா நிக்கற இடத்துக்கு வலதுபக்கம் அருகாமைல சுவரு இருந்துச்சு. அதுல புதுசா வர்ற ஹிந்திப்படம் பத்தின நியூஸு, ஸ்டார்ஸோட படங்கள், க்ரிக்கெட் நியூஸ்ன்னு ஒட்டி வெச்சாரு. அதை ரெண்டு, மூணு நாளைக்கொருக்கா மாத்தினாரு.

செம மாற்றம். க்யூவுல நிக்கறவங்களை ‘முன்னாடி தள்ளி நில்லு, க்யூ நகர்ந்துடுச்சு பாரு’ன்னு சொல்ற அளவுக்கு நிக்கறப்ப எல்லாரும் வலதுபக்கமா கழுத்தைச் சாச்சு படிச்சுட்டே இருந்தாங்க.

நல்லாருக்குல்ல?


-------------------

Thursday, April 28, 2011

அவியல் 28.04.2011


அவன் இவன் - யுவன்

ஒவ்வொரு புதிய ஆல்பம் வெளியிடப்படும்போது ஆர்வமாக அதற்காகக் காத்திருந்து ஒரிஜினல் சி.டி வாங்குவதில் எனக்கொரு அலாதி ஆர்வம். ஆனால் என்னைப் போன்றவர்களின் ஆர்வத்திற்கு ஒரு சில ஆலபங்களே சரியான தீனி போடுகின்றன. சில ஏமாற்றத்தையும், சில வெறுப்பையுமே தருகின்றன. யாரோ சொன்னார்கள் என்று ‘சேவல்’ பட ஆல்பத்தையெல்லாம் முதல் நாளே வாங்கிய மஹானுபாவன் நான். போலவே – திட்டாதீர்கள் – ஜக்குபாய், மாப்பிள்ளை, தூங்கா நகரம் ஒலிப்பேழைகள்.


மேற்குறிப்பிட்டவை போல வாங்கும் குப்பைகளைக்கெல்லாம் பிராயச்சித்தமாக எப்போதாவது அகஸ்மாத்தாக சில முத்துகளும் கிடைக்கும். இப்போதப்படி அமைந்தது அவன் இவன் பட ஒலிப்பேழை. யுவன் ம்யூசிக்.

ராசாத்தி போல என்று ஹரிசரண் குரல் ஆரம்பித்து அந்த துள்ளலிசை துவங்கும்போது செமயாக இருக்கிறது!

வரிகள் இல்லாத டையா டையா டோல் – உருமியில் ஆரம்பித்து உடுக்கையில் தொடர்ந்து தப்பு, தாரை, பறை என்று செவிப்பறையைக் கிழித்து அலப்பறை தரும் இந்த இசை – இனி எல்லா இடங்களிலும் கேட்கலாம். டாப்!

அவனைப் பத்தி நான் பாடப்போறேன் – தத்துவம் கலந்த அதிரடி சரவெடி. ஒரு மலையோரம் – நல்ல மெலடி. முதல்முறை – சோகப்பாடல்.

ராசாத்தியும், டையா டையா டோலும், அவனைப்பத்தியும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தமிழகத்தையே கலக்கப் போகிறது!

--------

வி

கோ

கே.வி.ஆனந்தை எனக்கு பிடிக்கும். மாத நாவல்களின் அட்டைப் படத்தில் அவரது க்ரியேட்டிவ் ஸ்டில்களைப் பார்த்து அவருக்கு கடிதமெழுதி, அவரும் ஒன்றிரண்டு பதிலெல்லாம் போட்டு (அது கெடைச்சா விடுவேனா உங்கள…) - அப்போதிலிருந்து பழக்கம் – அல்லது தெரியும்!

கனா கண்டேன், அயன் என்று மேக்கிங்கில் சிரத்தை காட்டும் இவரது டைரக்ஷனில் வரும் கோ-வை எதிர்பார்க்கக் காரணம் அவரது ப்ரொஃபஷனான அல்லது அவர் ஆசைப்பட்ட ஃபோட்டோக்ராஃபி ஜர்னலிசத்தை சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பதால்.

கதை எல்லாம் வேண்டாம். விமர்சனத்தில் கதை சொல்ல மாட்டேன் என்று இதோ இந்த என் கம்ப்யூட்டர் டேபிள் மேல் சத்தியம் செய்திருக்கிறேன்.

ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், டைரக்டர் என்று கைதட்டுவார்கள். இதில் ஸ்டில்ஸுக்காக நிறைய கைதட்டல்கள். அதே போல அமளி துமளி பாட்டின் லொகேஷன் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. (நார்வேயாமே.. அப்படியா?)

அந்த பத்திரிகை எடிட்டர் கதாபாத்திரத்துக்கு வைத்திருக்கும் பெயரில் கே.வி.ஆனந்த் என்னைக் கவர்கிறார். குட்!

ஜீவா-ஓகே. கார்த்திகா – நல்ல ஸ்ட்ரக்சர். படத்தில் எல்லாரையும் – என்னையும் – கவர்ந்தவர் பியா. க்யூட்.

பிரகாஷ்ராஜ் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அல்லது அவர் கதாபாத்திரம் கலைஞரை நினைவு படுத்துவதால் கத்தரிபட்டிருக்கிறார்.

எது எப்படியாயினும், அரசியலுக்கு தகுதியான இளைஞர் வருவதை கொஞ்சம் நெகடீவாகக் காட்டியதால் ஆனந்திற்கு – என் கண்டனம்.

----------------


நேற்றிரவு அலுவல் விட்டு, திருப்பூர் பிக் பஜாரைத் தாண்டி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தேன். இடது புறம் நான். எனக்கு வலது புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கார். இரண்டுக்கும் இடையே புகுந்த மினி ஆட்டோ ஒன்றின் மூக்கு முன்னால் செல்ல, கொஞ்சம் அகன்ற அதன் பாடி என் பைக்கை உரசி நான் பறந்து போய் விழுந்தேன். கிட்டத்தட்ட பத்தடிக்கு தரையில் நீச்சலடிப்பது போல தேய்த்தபடி போனேன். ஹெல்மெட் வாழ்க. அதன் தாடைப்பகுதியைப் பார்த்தால் தெரியும். அதுதான் என்னைக் காப்பாற்றியது.

ஆட்டோக்காரன் கொஞ்சம் முன்னே சென்று நிறுத்த, நான் கூட்டத்தை விலக்கி அவனைப் பிடி பிடி என்று சண்டைபிடித்துவிட்டு வந்தேன். பான் அமெரிக்கா – 1500 ரூ – சட்டை பாழ்! கை கால்களில் சிராய்ப்பு. பைக் முன்புறம் அடி.

திரும்பி வந்து பைக் எடுக்கும்போது கூட்டத்திலிருந்தவர்கள் எல்லாருமே ஹெல்மெட்டுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும் என்றனர். சொல்லீட்டேங்க என்றேன் அதை கையில் வைத்து ஒரு போஸ் கொடுத்தபடி.

ஒரு வாட்ச்மேன் வந்து ‘எதாவது மிஸ் ஆகுதுங்களா.. செல், பர்ஸ்..’ என்று கேட்டு ‘கைல வாட்ச் கட்டிருந்தீங்களா’ என்று இரண்டு மூன்று முறை வினவினார். இல்லைங்க என்று சொல்லி அவரைக் கவனித்தேன். டைட்டான் வாட்ச் ஷோரூமின் வாட்ச்மேன். அதான்!

இன்னொரு ALL IZZ WELL பதிவு வந்திருக்கும். தப்பிச்சீங்க!

--------------

ல்

ப்ருத்விராஜ் கல்யாணத்தால் மனமுடைந்திருக்கும் கன்னி ராசி கன்னியர்களே.. உங்களை மேலும் கலவரப்படுத்தும் செய்தியாக சூர்யா தம்பி, கார்த்திக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாம்.

பொண்ணு எப்படி இருக்காங்கன்னு இங்க போய்ப் பார்த்துக்குங்க.

அப்பாடா.. கொஞ்சம் நிம்மதி..

----

அவ்ளோதான்.

கொஞ்ச நாளாகவே சிஸ்டம் ப்ராப்ளம். இந்த நான்கு பக்கம் அடிப்பதற்கும் மூன்று முறை ரீ ஸ்டார்ட் ஆகிறது. ஆகவே இதை டாக்டரிடம் அனுப்புகிறேன். திரும்பி வரும் வரை பதிவிருக்காது. ‘இல்லை.. நீங்க எழுதியே ஆகணும்’ என்று அடம்பிடிப்பவர்கள் லேட்டஸ்டாக மார்க்கெட்டில் வந்திருக்கும் லேப் டாப் வாங்கிப் பரிசளிக்கலாம்.

குறிப்பு: வரிவிலக்கு உண்டு.


---------

.

Friday, April 15, 2011

அவியல் 15.04.2011


ந்த விஷயத்தை ஏற்கனவே அவியலில் எழுதிவிட்டேனா என்று தெரியவில்லை. எழுதி, நீங்கள் படித்திருந்தால் டக்கென்று ஸ்க்ரோல் செய்து அடுத்த பத்திக்குப் போகலாம். (!!!)

ஒருமுறை என் பைக்கை ட்ராஃபிக் போலீஸ் பிடித்துவிட்டார்கள். நான் தவறு செய்திருந்தேன். ஆகவே வண்டியை ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு அடுத்த நாள் எடுக்கச் சென்றேன். தீபாவளி நேரம். கோர்ட்டுக்கு அலையவிட முயற்சி செய்தார்கள். அவரை இவரைப் பிடித்து 2000 ரூ தருவது என்று பேரம் பேசி முடிவாகி கொடுக்கும்போது ஒரு ரூபாயைச் சேர்த்துக் கொடுத்தேன்.

‘எதுக்கு தம்பி 2001 தர்றீங்க?’ என்றார் அவர்.

‘அது என் வண்டி நம்பர். நீங்க மறக்காம இருக்க’ என்றேன் நான்.

------------------------

ன்னமும் என்னால் மாப்பிள்ளை படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. யானை தும்பிக்கை வைக்கும்போது பயப்படுகிற குழந்தை, யானையை டிவியில் பார்த்தால்கூட தன்னிச்சையாக நடுங்குமல்லவா.. அப்படி ஒவ்வொரு முறை இந்தப் பட ட்ரெய்லர் டிவியில் போடப்படும்போதும் கை நடுங்க, வீட்டில் எல்லாருமே ரிமோட்டை அவசர கதியில் தேடி ம்யூட் போடவும், சேனல் மாற்றவும் செய்துகொண்டிருக்கிறோம். எந்தவித சுவாரஸ்யத்துக்காகவும் இப்படி எழுதவில்லை. சத்தியமான உண்மை. (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?)

ஒருநாள் சாட்டில் வந்த ஃப்ரெண்ட் ஒருவர், இன்றைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போகிறேன் என்றார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல். சரி பார்த்துவிட்டு என் விமர்சனம் சரியா என்று உண்மையாகச் சொல்லுங்கள் என்றேன். இரண்டு நாட்களாக அவரிடமிருந்து பதில் இல்லை.

படம் பார்க்குமுன் பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லச் சொல்லியிருக்கலாமோ என்று நினைத்திருந்தபோது சாட்டில் வந்தார். 30 நிமிடங்கள் பார்த்துவிட்டு மூடிவிட்டாராம் லேப்டாப்பை. (டவுன்லோடிப் பார்த்திருக்கிறார். அதற்கும்கூட தகுதியில்லாத படம்) HORRIBLE என்றார் ஒரே வார்த்தையில். குசேலன் ,குருவியைக் கூட மன்னிக்கலாம் என்றார்.

இந்திய உலகக் கோப்பை வெற்றி, அன்னா ஹசாரே, ஓட்டளிப்பது ஜனநாயகக் கடமை - இதிலெல்லாம் காட்டிய அதே ஒற்றுமையை தமிழர்கள் மாப்பிள்ளையை எதிர்ப்பதிலும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் சந்தித்ததில் ஒரு ஜீவனும் ‘பரவால்லை’ என்றுகூட சொல்லவில்லை.

ரஜினியைப் பார்த்து கமல் கற்றுக் கொள்ளவேண்டும். கமலின் மகளை கைபிடிக்கப் போகிறவரிடம் கமல் வாங்கும் வாக்குறுதி ‘என் எந்தப் படத்தையும் ரீமேக்கக் கூடாது’ என்பதாக இருக்க வேண்டும்.
------------------------------
திருப்பூர் என்னவாகப் போகிறது என்று தெரியவில்லை. லட்சக்கணக்கானவர்கள் ரேஷன் கார்டுகளை - சொந்த ஊருக்கு மாற்ற - திரும்ப ஒப்படைத்து இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மாற்றுச்சான்று கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள். முன்னெப்போதுமில்லாத அளவு வீடு / கடைகளில் TO LET போர்டு தொங்குகிறது. நண்பரின் நிறுவனத்தில் பணி புரிபவர் “எங்க காம்பவுண்ட்ல 12 வீட்ல இப்ப 4 வீட்லதான் ஆளிருக்கு. காலைல வேலைக்கு வர்றப்ப நடந்துவர முடியாத அளவுக்கு ஆள்நடமாட்டம் இருக்கும். இப்போ அமைதியா இருக்கு” என்றாராம்.

அடுத்தது என்ன என்ற கேள்வி யாருக்குமே விடைதெரியாமல் தொக்கி நிற்கிறது. பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. என்னைப் போன்ற பல HR அலுவலர்கள் பாவச் செயலை செய்துகொண்டிருக்கிறோம். எப்போது விடியுமென்று தெரியவில்லை.. விரைவில் இதுபற்றி எழுதுகிறேன். (யாரு உன்னை எழுதச் சொல்லி கேட்டா’ன்னு சொல்லப்படாது!)

-----------------------------

டவுள் என்றொருவர் இருக்கிறாரா என்று கேள்வி பலமுறை நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு வரும். பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ராவின் மகள் இறப்பைக் கேள்விப்பட்டதும் இந்தக் கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

திருமணமாகி 8 வருடங்களுக்குப் பிறகு சித்ரா தம்பதியினருக்கு ஜனித்த அந்தக் குழந்தை, நேற்று UAEல் ஒரு நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துவிட்டதாம்.

கொஞ்சம் ஹஸ்கி வாய்ஸில் பாடவேண்டுமென்றால் கூட வெட்கப்படுபவர் சித்ரா. அவ்வளவு அமைதியான சுபாவம் கொண்டவருக்கு இப்படி ஒரு நிகழ்வா என்று வருத்தமாகவே இருக்கிறது.

:-(

குழந்தை இறப்புக்குப் பிறகும், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்திய நிகழ்ச்சி அமைப்பாளர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

--------------

சில மாதங்களுக்கு முன் ஒரு வெப்சைட் நிறுவனம் தன் வெப்சைட்டின் PROMOவுக்காக தோனியைக் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் தோனியின் ஒரு புத்தகம் வெளியிட்டது. ஒரு புத்தகத்தின் விலை ஒரு ரூபாய். லட்ச / கோடிக் கணக்கில் விற்பனையாகும் என்பது திட்டம். விற்றதோ ஆயிரத்துச் சொச்சம் மட்டுமே.

பிறகு காரணத்தை அலசியபோது அவர்களுக்கு கிடைத்த விடை: அணியின் வெற்றியை தோனி என்கிற தனிமனிதனின் சாதனையாக மக்கள் அங்கீகரிக்கவில்லை. அணியின் வெற்றியாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்று புரிந்ததாம். தனிப்பட்ட சாதனையாளர்களின் சுயசரிதையைத்தான் மக்கள் வாங்கத் தயாராக இருக்கிறார்கள்.

--------------------

றை நல்லது என்பதுபோல கரண்ட் கட் நல்லது என்று சொல்ல வைத்து விட்டார்கள் ஒரு சில நாட்களுக்கு முன். மின்சாரத்தைத் துண்டித்து, அந்த நேரத்தில் வீடு வீடாக பணப்பட்டுவாடா நடந்ததாம். எங்கள் பகுதியில் இந்தச் செய்தி வேகமாகப் பரவ கரண்ட் கட்டானபோது பல வீடுகளும் கதவைத் திறந்துவைத்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கும் ஒரு கவர் கிடைக்குமென எதிர்பார்த்தேன். கிடைக்காத ஆத்திரத்தில் இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று முடிவெடுத்தேன்!

Jokes apart, சில ஊர்களில் கவர் கொடுக்க வந்த கட்சியினரை தேர்தல் கமிஷனிடம் மாட்டிவிட்ட மாற்றுக் கட்சியினர் மீது மக்களே கோவமாக இருந்ததைக் காணமுடிந்ததாம். ‘நமக்கு கொடுக்க வர்றதை தடுக்கறான் பாரு’ என்று காசு கொடுக்காமலே தங்கள் கட்சிக்கு ஓட்டு வாங்கிவிட்டார்களாம் கவரோடு வந்தவர்கள். கில்லாடிகள்தான்! எனக்குத் தெரிந்து ஓர் ஊரில் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு பணப் பட்டுவாடா நடந்ததாம்.

இத்தனைக்குப் பிறகும் தேர்தலை நடத்திக் காட்டிய தேர்தல் கமிஷன் பாவம்தான். படித்தவர்களின் மாநிலமாகப் போற்றப்படும் கேரளாவைவிட அதிக சதவிகித வாக்குப் பதிவானதில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

----------------


.

Wednesday, April 13, 2011

உங்கள் பொன்னான வாக்கை...


னக்கு அரசியல் மேல் அப்படி ஒன்றும் பெரிய தொடர்போ, ஆர்வமோ இல்லவே இல்லை. சீசனுக்காக இன்றைக்கு அரசியல் அலசல்.

இன்றைக்கு வாக்குப்பதிவு நாள். இந்த தேர்தல் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

தி.மு.க. அரசின் மீது அதிகமான எதிர்ப்பலைதான் இருந்தது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில். ஆனால் சரியான காய் நகர்த்தல்கள், ட்ராமாக்கள், செண்டிமெண்ட் ஷோக்கள், விளம்பரங்கள் என்று கொஞ்சம் எதிர்ப்பை ஆளுங்கட்சியினர் சரிகட்டிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

வடிவேலுதான் இந்த முறை தி.மு.கவின் ஸ்டார் பேச்சாளர். எப்பேர்ப்பட்ட தலைவர்களை எல்லாம் முன்னிறுத்தி பேசி ஓட்டுக் கேட்ட கட்சி, இன்றைக்கு வடிவேலுவை முன்னிறுத்தித்தான் ஓட்டுக் கேட்டாக வேண்டிய சூழலுக்கு வந்தது கொடுமைதான்.

வடிவேலு மீது எனக்கெந்த வருத்தமும் இல்லை. நான் சொல்லி நீங்கள் கேட்கவேண்டிய அவசியமெப்படி இல்லையோ அதேதான் வடிவேலுவுக்கும். விஜயகாந்தையும், பிரேமலதாவையும் குறிப்பிட்டு ‘உனக்கு அரசியலைப்பற்றி என்ன தெரியும்’ என்று ஒருமையில் கேட்குமளவு வடிவேலு ஒன்றும் அரசியல் ஆசானில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். வடிவேலுவும் வாங்கிய காசுக்கு மேலேயே கூவினார். கடைசி நாளில் கண்ணீர் ட்ராமாவெல்லாம் வேறு!


அதை சரியாக மார்க்கெட்டிங் செய்ததில் தாங்கள் கெட்டிக்காரர்கள்தான் என்று நிரூபித்தது திமுக-சன் டிவி கூட்டணி. தினகரன் எரிப்பு வழக்கின்போது, அதுவரை முதல்வர் கலைஞரெல்லாம் சொல்லி வந்த சன் டிவியினர் பிறகு கருணாநிதி என்றே குறிப்பிட்ட ஆரம்பித்தது பேசப்பட்டது. ஆக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறுபவர்கள் இதிலும் அவ்வாறே நடந்து கொண்டார்கள். இன்றைய சூழலில் அழகிரி, ஸ்டாலின், கலைஞர் பேச்சுகளின் க்ளிப்பிங் நேரத்தை விட வடிவேலுவின் க்ளிப்பிங் நேரம் அதிகரிப்பதே ஜெயிக்க வழி என்று செயல்பட்டார்கள்.

அதேபோல விஜய்காந்த் பேசியதையும் பேசாததையும் மிக்ஸிங் எல்லாம் செய்து ஃபிலிம் காட்டினார்கள். தினகரனில் திமுக பற்றிய பாஸிடிவ் செய்திகள் மட்டுமே வந்தன. கலைஞர் டிவி மானாட மயிலாட உட்பட எல்லாவற்றையுமே தங்கள் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டது திமுக.


திமுக கூட்டணியின் மற்றொரு பலம் அதன் விளம்பரங்கள். கலக்கலாக அமைந்தது. ஜவுளிக்கடை விளம்பரங்களைப் போலவே பாட்டெல்லாம் போட்டு அருமையாக இயக்கியிருந்தார்கள். அதுவும் ‘நாட்டுக்கொரு நல்லசேதி நாத்தனாரே’ ஆரம்பித்தாலே வீட்டில் உள்ள எல்லாரும் உடன்பாட ஆரம்பித்தார்கள். (கவனிக்க: உடன் பாட. உடன்பட அல்ல!) இது ஜெயலலிதா அணியில் மிஸ்ஸிங். பாரதியார், கட்டபொம்மன், பெரியார், அண்ணாவெல்லாம் வந்து அதிமுகவுக்கு ஓட்டுக் கேட்பது போல ஒரு விளம்பரம் வந்தது. அதற்கப்புறம் ஜெயா சேனலே வைக்க பயமாக இருந்தது எனக்கு. அவ்வளவு திராபை. ஒரு விளம்பரத்தையே ஒழுங்காக மக்களைக் கவரும் வண்ணம் செய்யத்தெரியாதவர்களாக இருக்கிறார்களே என்று கோபம் கோபமாக வந்தது.

அதிமுகவின் பலம் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்தத் தேர்தலில் இரண்டே அலைதான். திமுக ஆதரவு அலை. திமுக எதிர்ப்பு அலை.

அதிமுக ஆதரவு அலை என்ற ஒன்று இல்லவே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் ஒரு மண்ணாங்கட்டியையும் செய்யாததே அதற்குக் காரணம். அதே போல ஒரு வடிவேலுவுக்கு கவுண்டர் கொடுக்குமளவுக்குக்கூட பேச்சாளர் யாருமில்லாதது அதைவிடக் கொடுமை.

ஜெ-வின் சர்வாதிகாரப் போக்கு அல்லது அப்படித் தோற்றமளிப்பதுபோல அவர் நடந்துகொண்டதும் சரியில்லை. திமுகவினர் வடிவேலுவுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கூட, ஜெ அணி, நடிகர் சங்கத் தலைவர், ஒரு கட்சியின் தலைவரான சரத்குமாருக்குக் கொடுக்காதது துரதிருஷ்டமே. அரசியலில் அவர் சுண்டைக்காயாக இருந்தாலும் ரெண்டு சீட் கொடுத்த பாவத்துக்கு அவரையும் கொஞ்சம் கண்டுகொண்டிருக்கலாம்.

மதிமுகவை கழட்டிவிட்டது ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு. வைகோஆதரவு அலை என்ற ஒன்று இருக்கிறது. ஈழப்பிரச்னை உட்பட சில ப்ரச்சினைகளில் இறங்கிப் போராடியது அவர்கள்தான். அதிமுகவை விட. தவிரவும் வைகோ, நாஞ்சில் சம்பத் என்ற பிரச்சார பீரங்கிகளை இழந்தது இந்தக் கூட்டணி. போதாக்குறைக்கு எதிரணியின் பேச்சை மெய்ப்பிக்கும் வகையில் விஜயகாந்த் கோவைப் பிரச்சாரத்துக்குப் போகாதது கொஞ்சம் எரிச்சலையே உண்டு பண்ணியது.


மற்றொரு விஷயம் தினமலர், விகடன் போன்ற பத்திரிகைகள் (திமுக பாணியில் சொல்வதானால் – பார்ப்பண ஏடுகள்) வெளிப்படையாகவே திமுகவுக்கு எதிரான நிலை எடுத்தன. திமுக குடும்ப ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சினிமாத்துறையினர் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலையில்தான் இருக்கிறார்கள்.

போலவே காங்கிரஸ் அரசும் திமுகவினரும் இலங்கைப் பிரச்னையில் நடந்துகொண்ட விதம் எவருக்கும் பிடிக்கவில்லை. ஐநூத்திச் சொச்சம் மீனவர்களுக்காக காங்கிரஸ் அரசை மிரட்டாதவர்கள், அறுபது சொச்சம் சீட் பிரச்னைக்காக ராஜினாமா செய்யட்டுமா என்று மிரட்டியது படுமோசம். போதாக்குறைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வேறு!

----------------

முழுதாகப் படித்து விட்டீர்களா? நான் யாரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்று ஏதாவது புரிந்ததா? இல்லைதானே? எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. குழப்பமாகவே இருக்கிறேன். ஆனால் ஆளுங்கட்சிக்குப் போடக்கூடாது என்ற மனநிலை இப்போது வரை இருக்கிறது. இலவசங்கள் கொடுத்து மக்களைக் குட்டிச் சுவராக்கி, ஓட்டுக்குப் பணம் என்ற புதிய சிஸ்டத்தைக் கொண்டு வந்து நாசமாக்கி, அவர்கள் கைகாட்டும் படம்தான் வெளியாகும், அவர்கள் சொன்னதே சட்டம் என்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக செய்யும் சர்வாதிகாரம் என்று பலதும் என் போன்ற பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறதென்பது பலரிடம் பேசும்போது தெரிந்தது.

சும்மா வாய்வழி சர்வே நடத்தியதில் எனக்குக் கிடைத்த ரிசல்ட் அதிமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது!

------------------

எது எப்படியாயினும் உங்கள் பொன்னான வாக்குகளை யாருக்காகவேனும் அளிக்க மறக்காதீர்கள். அது உங்கள் உரிமை.. கடமை.. எக்ஸெட்ரா எக்ஸெட்ரா..

கடைசியா உங்களுக்காக ஒரு வீடியோ... தவறாமப் பாருங்க..





அடுத்த ஐந்தாண்டு உங்கள் வாழ்வு செழிக்க நீங்கள் உழைத்துத்தான் ஆகவேண்டும்.. அதிலெந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

ஆல் த பெஸ்ட்!

.


Sunday, April 10, 2011

மாப்பிள்ளை - கொலைவெறி..

கீழ இருக்கற ஸ்டில்லைப் பாருங்க...

அங்க கெடக்கறது நான். சுத்தியும் இருக்கறது படத்தோட டைரக்டர், நடிகர்கள், முக்கியமா விவேக்ன்னு கற்பனை பண்ணிக்கோங்க.


ரெண்டு மணிநேரம்.. தெளியத் தெளிய அடிச்சுட்டாங்க... வீட்ல கூட்டீட்டுப் போனதுக்கு, பொண்டாட்டி மகளிர் போலீஸ்ல போய் வன்கொடுமை சட்டத்துல புகார் குடுக்கவான்னு கேட்கறாங்க. குழந்தைங்க ரெண்டு மணிநேரமா என்கிட்ட பேசல.


ஆடுகளம் நல்லாருந்துச்சுன்னா அவருக்கு திருஷ்டி கழியணும்தான். அதுக்காக இப்படியா?


விவேக்கெல்லாம் %^$%#%^#ட்டு வேற ஏதாவது வேலைக்குப் போகலாம். சேர்த்து வெச்ச பேரையெல்லாம் கெடுத்துக்க வேணாம். அவரு மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அநியாயம்.


இந்தப் படத்தை எடுத்தவங்களையும், நடிச்சவங்களையும்கூட நான் மன்னிச்சிடுவேன். ஆனா இந்தப் படத்துக்கு ப்ரிவ்யூன்னு ஒண்ணு போட்டிருப்பாங்கதானே.. அப்ப இந்தப் படத்தை ‘சூப்பர்ங்க.. நிச்சயம் ஹிட்டுதான்’ன்னு எவனாவது ஒருத்தன் சொல்லிருப்பான்ல? அத நம்பித்தானே இவங்க படத்தை வெளியிடறாங்க? அவனை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன்.


கொலைமுயற்சில இவங்க மேல கேஸ்போடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.


படுபாவிங்க...



.



Thursday, April 7, 2011

‘டீ வேணுமா’ன்னு கேட்டதால் தான் சச்சின் அவுட்!



ன்னும் எத்தனை நாளைக்குடா பேசுவீங்க என்று கேட்பவர்களுக்கு - அடுத்ததாக 2015ல் மீண்டும் வென்று புதுப்பிக்கும் வரை - என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.





டி 20 உலகக் கோப்பை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனாக ஐபிஎல்-கோப்பை, தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி, டெஸ்டில் நம்பர் ஒன் இடம் என்று தோனி தொட்டதெல்லாம் துலங்கிக் கொண்டிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகம் இந்த முறை. அப்படியானதொரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் மெய்ப்பித்திருக்கும் இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டம் சம்பந்தமான சில துளிகள்.

------------------

செண்டிமெண்ட் பார்க்காத க்ரிக்கெட் ரசிகர்கள் வெகு குறைவு. இந்த உலகக் கோப்பையின் போது வந்த சில செண்டிமெண்ட் மெசேஜஸ்:

# உலகக் கோப்பையில் SPIN முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்படி என்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்: Srilanka, Pakistan, India and Newzeland. நான்கின் முதலெழுத்தைக் கூட்டுங்கள். SPIN! இதில் இருக்கும் ஒரே ஒரு Vowel - I. ஆகவே மற்ற மூன்றைக் காட்டிலும் தனித்திருப்பதால் இந்தியாவின் வெற்றி உறுதி! (ரூம் போட்டு யோசிப்பாங்களோ??)

# இந்தத் தொடரில் ‘எம்’ என்ற எழுத்தில் துவங்கும் இடங்கள்/மைதாங்களில் இந்தியா வென்று வருகிறது. மிர்புர் (வங்கதேசம்), எம்.ஏ.சின்னசாமி அரங்கம் (அயர்லாந்து), மொடிரா (ஆஸி), மொகாலி (பாக்). இவற்றைத் தொடர்ந்து மும்பை-யில் இறுதிப் போட்டி நடப்பதால் வெற்றி நமதே. தவிரவும் கேப்டன் யார்? மகேந்திர சிங் தோனி. M! - Magic!!

# 1983ன் காலண்டரும், 2011ன் காலண்டரும் ஒன்று. ஆக அப்போது கோப்பை வென்றது போல, இப்போதும் வெல்வோம்!

------------------

இது தவிர என் சுற்று வட்டத்தில் நடந்த சில சுவாரஸ்யங்கள்:

ங்கள் நிறுவனத்தில் மைக் அனௌன்ஸ்மெண்ட் அசெம்ப்ளி சிஸ்டம் உள்ளது. வருகைக் குறைவைத் தடுக்க வேண்டி, தென்னாப்பிரிக்காவுடனான மேட்ச் முதல் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்கோர் அறிவிக்கிறேன் என்று சொல்லி, அதே போல அறிவித்து வந்தேன். சச்சினும், சேவக்கும் புகுந்து விளையாடி ஸ்கோர் 300ஐத் தாண்டுமென நினைத்து தொடர்ந்து பார்க்க வீட்டுக்கு ஓடிவிட்டேன். மேட்ச் தோற்றோம்.

அந்த செண்டிமெண்டால், ஆஸியுடனான மேட்ச் ஸ்கோரை அறிவிக்கவே இல்லை நான். பலரும் கேட்க அவ்வப்போது நோட்டீஸ் போர்டில் ஒட்டிவிட்டேன்!

---------------

ருகாமையிலுள்ள நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் ஆஸி மேட்ச்சின் போது பொய் காரணம் சொல்லி மட்டம் போட்டுவிட்டு பக்கத்து தாபா ஒன்றில் பீரோடு மேட்ச் பார்த்து, செகண்ட் இன்னிங்க்ஸூக்கு தன் வீட்டுக்குப் போனாராம். மேட்ச் வெற்றி. அந்த செண்டிமெண்டின் காரணமாக பாக் மேட்ச்சுக்கும் அதேமாதிரி, ஃபைனல்ஸுக்கும் அதே மாதிரி செய்தாராம். நான் ‘மேட்ச் பாக்கப் போறேன்னே சொல்ல வேண்டியதுதானே? PM, ப்ரசிடெண்ட் எல்ல்லாம் மேட்ச் அன்னைக்கு ஆஃபீஸுக்கு மட்டம் போட்டுட்டு க்ரவுண்ட்ல உட்கார்ந்திருக்காங்க… உங்களுக்கு என்ன? என்றதற்கு ‘நான் கேட்டா லீவ் தருவாங்க சார். ஆனா பொய் சொல்லி லீவெடுத்துப் போனாத்தான் ஜெயிக்குது. அதான்’ என்றார்.

------------------

ன்னொரு நண்பர் - ஃபைனல்ஸ், இந்தியா பேட்டிங்கின் போது, சச்சின் அவுட் ஆன பிறகு தன்வீட்டு பிரம்பு சோஃபாவில் ஒரு காலை HAND RESTல் (கை வைக்கும் பகுதி) தூக்கிப் போட்டபடி பார்த்துக் கொண்டிருந்தாராம். விராட் கோஹ்லி, காம்பீர் சிறப்பாக விளையாட கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக பொசிஷன் மாறாமல் மேட்ச் பார்த்தாராம். கோஹ்லி அவுட் ஆனதும் காலை இறக்கி சாப்பிட்ட தட்டை சிங்கில் போட்டு, கை கழுவிவிட்டு வருவதற்குள் தோனி / காம்பீர் சிறப்பாக ஆட ஆரம்பிக்க கையை சேரில் வைத்து நின்றபடியே பார்த்தாராம். காம்பீர் அவுட் ஆனதும் டக்கென்று உட்கார்ந்தவர் அதே பொசிஷனில் மேட்ச் முழுவதும் பார்த்தாராம். ‘மொத்தம் மூணே போஸ்தான் மாறினேன்.. பயம்ம்ம்மா இருந்துச்சு’ என்றவரைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

----------------------

வேறொரு நண்பரின் மனைவி புலம்பியது அதைவிட சுவாரஸ்யம்: ‘இனிமே மேட்ச் பாக்க வேணாம்னு சொல்லுங்ணா.. அன்னைக்கு பூரா என்ன டென்ஷன். எதாவது சொல்லப் போனாக்கூட முகத்தைப் பார்த்தாலே பயமா இருந்துச்சு. இவருக்காகவாது இந்தியா ஜெயிக்கணும்ன்னு வேண்டிகிட்டேன். ஃபைனல்ஸ்ல சச்சின் ஆடிகிட்டிருக்கும்போது, தேவையில்லாம அவர்ட்ட போய் ‘டீ வேணுமா’ன்னு கேட்டேன். அப்ப சச்சின் அவுட். ‘நீ நடுவுல வந்து கேட்டதுனாலதான் சச்சின் அவுட்டு’ன்னு எனக்குத்தான் திட்டு விழுந்துச்சு’ என்று புலம்பினார். அவனை முறைக்க அவன் ‘மேட்ச் ஜெயிச்சதுக்கு சண்டே கூட்டீட்டு போய் பார்ட்டி வெச்சு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து சரிகட்டீட்டேண்டா’ என்றான்.

------------------------

நான் ஃபைனல்ஸை நண்பனின் ரூமில் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். வீட்டில் மகள்கள் இருவருமே இந்த உலகக் கோப்பை முதல் க்ரிக்கெட் ரசிகைகள் ஆகிவிட்டார்கள். அவர்களோடு பார்த்தேன். முழுக்க முழுக்க பார்க்காமல் சேனல் மாற்றி மாற்றி அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி கட்டத்தில் முழுவதும் பார்த்தேன். ஆனால் தோனியின் சிக்ஸை லைவாகப் பார்க்கவில்லை. இன்னும் 20 ரன்னுக்கும் குறைவாக இருந்த போது வந்து கம்ப்யூட்டரில் அமர்ந்துவிட்டேன். உள்ளிருந்து மகள் அப்டேட் செய்து கொண்டிருந்தாள். ‘அப்பா சிக்ஸர்’ என்று அவள் கத்த, நான் ஓடுவதற்குள் யுவராஜ் தோனியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்! ஜெயித்து முடிந்ததும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி, அந்த நள்ளிரவில் மகள்களோடு ஒரு ரவுண்டு வந்தேன். ஊரே திருவிழாக் கோலமாக இருந்தது.

வேறு சிலர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கேட்டபோது:

சௌந்தர்: (தனியார் நிறுவன ஊழியர்):

என் நண்பனின் அறையில், வேறு சில நண்பர்களோடு முதல் இன்னிங்ஸ் பார்த்தேன். சேஸிங்கின் போது சச்சின் அவுட் ஆனதும் இந்த டிவி ராசியில்லை என்று அவரவர் வீட்டுக்கு போக முடிவெடுத்து கிளம்பிப் போய்விட்டோம். தோனியின் அந்த சிக்ஸின் போது குதித்து விட்டேன். மேட்ச் ஜெயித்ததும் எங்கள் காம்பவுண்டில் எல்லாருமாய் கூல்டிரிங்க்ஸ், ஸ்நாக்ஸ் என்று சாப்பிட்டபடி டான்ஸ் ஆடிக் கொண்டாடினோம்.

முக்கியமான இன்னொரு விஷயம்: நாங்கள் முதல் இன்னிங்ஸ் பார்த்த அறையில் இருந்த அந்த நண்பர், நாங்கள் வெளியேறினதும் டிவியை ஆஃப் செய்துவிட்டு பக்கத்து அறையில் போய் மீதி மேட்சைப் பார்த்தாராம்!

சில பிரபல வலையுலகினரைக் கேட்டபோது..

சுசி:

சத்தியமா இந்தியா ஜெயிக்கும் ஆரம்பம் முதலே நம்பிக்கை இருந்தது. தோனி சிக்ஸ் அடிச்சப்ப அப்டியே அழுதுட்டேன். ஜெயிச்சதும் போஸ்ட் எழுதி, BUZZ போட்டு கொண்டாடினேன். அடுத்தநாள் வீட்ல சமையல் கட்.

ஜோசப் பால்ராஜ்:

நான் அப்போது கொரியாவில் இருந்தேன். மேட்சைப் பார்க்க முடியவில்லை. நெட்டில்தான் பார்த்துக் கொண்டும், நண்பர்களோடு சாட்/BUZZல் பேசிக் கொண்டும் இருந்தேன். தவிர, கார்க்கியின் ட்விட்ஸை விடாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அவரது ஸ்டைலில் கலக்கிக் கொண்டிருந்த அந்த ட்விட் நான் நண்பர்களோடு இருக்கும் ஃபீலைத் தந்தது.

சென்னை / சிங்கப்பூரில் இருந்திருந்தால் நண்பர்களோடு நேரில் கொண்டாடியிருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது.

அனுஜன்யா:

கோப்பை நிச்சயம் இந்தியாவுக்குதான் என எதிர்பார்த்தேன். மும்பையில் வான்கடே மைதானத்தில் ஒரு புறம் கேத்ரினா கைஃப், மறுபுறம் Beboவுடன் பார்த்தேன். தோனி சிக்ஸ் அடித்ததும் மேட்ச் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். (அடா அடா அடா!!!) காத்ரினாவுக்கு பை பை சொல்லிவிட்டு கிளம்பினேன். அருகிலிருந்த கோவில், மசூதி, புத்த விஹார் எல்லாவற்றுக்கும் சென்று கடவுளுக்கு ந்ன்றி சொன்னேன்.

(மேலே சொன்னதில் ஒன்று மட்டும் நடக்கவில்லை - அனுஜன்யா)

அதிஷா: (முன்னாள் வலைப்பதிவர் - இந்நாள் பத்திரிகையாளர்)

உலக கோப்பை தொடங்கும் முன் அதுகுறித்து கவர்ஸ்டோரி செய்ய சொல்லி எடிட்டர் சொன்ன போதே , நான் பரிந்துரைத்த தலைப்பு ''இந்த முறை இந்தியாதான்!'' கவர்ஸ்டோரியும் அதையொட்டியே இந்தியா ஏன் வெல்லத்தகுதியான அணி என்கிற அடிப்படையிலேயே எழுதியிருந்தேன். மனசு முழுக்க இந்தியா வெல்லும் என்கிற எண்ணம் மட்டுமே போட்டி தொடங்குவதற்கு முன் நிறைந்திருந்தது. அதற்கு என்னிடம் வலுவான காரணங்கள் ஏராளமாய் இருந்தன.

இறுதிப்போட்டியை அலுவலகத்தில் சக தோழர்களோடு இன்டர்நெட்டில்தான் பார்க்க முடிந்தது. தோனி சிக்ஸ் அடித்த தருணத்தில் உணர்ந்ததை வார்த்தைகளாலும் விவரிக்க முடியுமா என்ன! கண்ணீர் பெருக்கெடுத்து ஓட.. மனசுக்குள் மத்தாப்பு இல்லை இல்லை தீபாவளியே கொண்டாடி தீர்த்திருப்பேன்.. மேட்ச் முடிந்ததும் நண்பருகளுக்கெல்லாம் போன் போட்டு ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டேன். அதில் பலரும் இந்தியாவின் மீது நம்பிக்கையில்லாமல் தோற்றுவிடும் என கூறியவர்கள். அதில் சிலரை எழுதவியலாத கெட்டவார்த்தைகளால் அர்ச்சனை செய்யவும் தவறவில்லை. இவை தவிர மேட்ச்சின் ஒவ்வொரு விநாடியிலும் டுவிட்டரில் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

யுவகிருஷ்ணா :

1. இந்தியன் என்கிற அடிப்படையில் இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பத்தில் மட்டுமல்ல. ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும் இந்தியாதான் வெல்லும் என்று எதிர்ப்பார்ப்பது என்னுடைய வழக்கம்.

2. இறுதிப்போட்டியை அலுவலகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சச்சின் அவுட் ஆனவுடனேயே ‘ஆப்பு’தான் என்று அஞ்சிப்போய், வீட்டுக்குச் சென்று மீதியை கண்டேன். வீட்டில் நான் மட்டுமே மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன்.

3. தோனி அடித்த வின்னிங் ஷாட் சிக்ஸரை விட, முக்கியமான கட்டத்தில் ஆஃப் சைடில் கங்கூலி பாணியில் அவர் அடித்த கச்சிதமான சிக்ஸரே அதிக மகிழ்ச்சியை தந்தது. இறுக்கத்தைத் தளர்த்திய சிக்ஸர் அது. வின்னிங் ஷாட் அடித்தபோது, வாழ்நாளில் இன்னொருமுறை காணக்கிடைக்காத அரியத் தருணம் இதுவென்பதாக உணர்ந்தேன்.

4. மேட்ச் முடிந்ததும் கிட்டத்தட்ட யோகநிலைக்குப் போய்விட்டேன். ஹர்பஜன் அழுததைக் கண்டதும் உணர்ச்சிவயப்பட்டு என்னுடைய கண்களும் கலங்கியது. சச்சினை தோளில் சுமந்து வீரர்கள் மைதானத்தை வலம் வந்தார்கள். நாடே அவ்வீரனை தோளில் சுமந்த உணர்வு ஏற்பட்டது. அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. பட்டுக்கோட்டை பிரபாகரின் ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன்.

ச்சின்னப்பையன் சத்யா:

உலகக்கோப்பை பாகிஸ்தான் வெல்லும் என எதிர்பார்த்தேன். இறுதிப் போட்டியை மகளுடன் வீட்டில் அவளுக்கு க்ரிகெட்டைப் பற்றிச் சொல்லிக் கொண்டே பார்த்தேன். தோனி சிக்ஸ் அடித்த போது CHAK DE INDIA என்று உரக்கக் கத்திவிட்டேன். நானே விளையாடியபோது களைப்பு. அரைமணி நேரம் தூங்கிவிட்டு குடும்பத்தோடு ஐஸ்க்ரீம் சாப்பிடப் போனேன்!


கார்க்கி:

தொட‌ர் ஆர‌ம்பிக்கும் முன்பு நான் க‌ணித்த‌து இந்த‌ ப‌திவில் இருக்கிறது. தொட‌ர் ஆர‌ம்பித்த‌ நாள் முத‌லே ட்விட்ட‌ரில் இந்தியாதான் ஜெயிக்கும் என‌ சொல்லியிருந்தேன். அலுவ‌ல‌க‌த்தில் இதுவ‌ரை 600 ரூபாய் இந்தியா ஜெயிக்கும் என‌ சொல்லி வென்றிருக்கிறேன் :)

இந்த‌ உல‌க‌ கோப்பையில் எல்லா போட்டிக‌ளையும் நான் குறைந்த‌து 100 பேருட‌ன் பார்த்தேன்.ஆம் ட்விட்ட‌ரில் ந‌ண்ப‌ர்க‌ளோடு உரையாடிக் கொண்டு தான் போட்டிக‌ளை ர‌சித்தேன். இறுதிப் போட்டியையும் வீட்டிலே இருந்து, ட்விட்ட‌ரில் பேசிக்கொண்டே பார்த்தேன்.

உண்மையை சொல்ல‌ வேண்டுமெனில் தோனி சிக்ஸ் அடிக்கும் முன்பாக‌வே இந்தியா வெற்றிபெற்று விட்ட‌து. அத்த‌ருண‌த்தில் ட்விட்ட‌ரில் இந்தியா தோற்கும் என‌ சொல்லிக் கொண்டிருந்தவ‌ர்க‌ளை தேடித்தேடி வ‌ம்பிழுத்துக் கொண்டிருந்தேன். என் உற்சாக‌த்தை அப்ப‌டியே ப‌திவு செய்துக் கொண்டிருந்தேன். அத‌னால் தோனியின் செக்ஸி சிக்ஸை ரீப்ளேயில்தான் பார்க்க‌ முடிந்த‌து.

போட்டி முடிந்த‌வுட‌ன் ப‌ட்டாசு வெடித்தோம். சில‌ ந‌ண்ப‌ர்க‌ளின் தொலைபேசி அழைப்பு இன்னும் உற்சாக‌ம் த‌ந்த‌து. பின் மீண்டும் வ‌ந்து ட்விட்ட‌ரில் மூழ்கிவிட்டேன். ட்விட்ட‌ரில் பேசுவ‌து என‌க்கு ஏனோ ஒரு பெரிய‌ குழுவுட‌ன் நேரில் அர‌ட்டைய‌டிப்ப‌து போலிருப்ப‌தால் அதையே செய்து கொண்டிருந்தேன்.

பாலராஜன்கீதா:

கிருஷ்ணா, வீட்டில் அனைவரும் நலமா? ஏதோ கேள்வி கேட்டிருக்கிறீர்கள். அதில் அடிக்கடி க்ரிக்கெட் என்ற வார்த்தை வருகிறது. அப்படி என்றால் என்ன?



.

Tuesday, April 5, 2011

இரண்டு லியோ டால்ஸ்டாய் கதைகள்



திருப்பூரில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கு
ஒன்றில் பேச்சாளர் திரு. பாரதி கிருஷ்ணகுமார் சொன்ன - லியோ டால்ஸ்டாய் எழுதிய - இரண்டு கதைகள் இரண்டினை அடுத்த பதிவில் தருகிறேன் என்று இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன்.


இதோ அவை:

--------------------
1.

ரு காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பலத்த போர். காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி ஒரு சூழல் வருகிறது. பறவைக்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது. (இந்த இடத்தில் ஒரு சுவாரஸ்ய விஷயம். பாரதி கிருஷ்ணகுமார் இந்தக்கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது மூன்றாவது வரிசையில் ஒருவர் தன் செல்ஃபோனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கு அது இடைஞ்சலாகப் பட்டது. மேடையில் பேசிக் கொண்டிருந்த பாரதி கிருஷ்ணகுமாருக்கும் இது உறுத்தவே.. இந்த நீ செய்வது நியாயமா என்ற வார்த்தையை இரண்டு முறை உரக்க அந்த செல்ஃபோன் ஆசாமியைப் பார்த்து கேட்க அவர் டக்கென்று செல்’லை அணைத்துவிட்டார்.)

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில்… ச்சே. கூட்டத்தில் சேரப் பறந்தோடியது. போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா? இதோ பாருங்கள்.. இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

--------------------------

2.

ரு வீட்டில் எஜமானர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்கிறார். காவலுக்கு நிற்கிறது கம்பீரமான நாய் ஒன்று.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு ஒரு திருடன் அந்த வீட்டு வாசலுக்கு வருகிறான். நாய் இருப்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறான். நின்று நோட்டம் பார்க்கையில், நாயும் அவனைப் பார்க்கிறது. குரைக்காமல்.

குரைக்காத நாய் கடிக்காது என்றவனுக்கு யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஆக, இந்த நாய் விவரமானது என்றுணர்கிறான். கையோடு கொண்டு வந்த நெய்யில் பொரிக்கப்பட்ட இறைச்சித் துண்டு ஒன்றை நடுவில் போடுகிறான்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனிதன், எதையோ போட்டதுமே சுதாரிக்கிறது நாய். மெதுவாக அந்தப் பொருளை நுகர்கிறது.

அவ்வளவுதான். அடுத்த நொடி அந்த மனிதன் மீது விழுந்து கடித்துக் குதறுகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாத அந்தத் திருடன் நிலைகுலைந்து போகிறான். ஒருவாறு கடிபட்டவாறே தடுத்து அந்த நாயைப் பார்த்து வினவுகிறான்:

‘ஏன் நாயே.. நான் உன்னைப் பார்த்த போதே குரைத்து என்னை
எச்சரித்திருந்தால் நான் ஓடிப் போயிருக்க மாட்டேனா..’ என்கிறான்.

நாய் சொல்கிறது: ‘நான் உன்னைப் பார்த்து குரைக்காததன் காரணம் நீ சாதாரண மனிதனா அல்லது திருடனா தெரியாததால்தான். அதனால்தான் உன்னைப் பார்த்துக் குரைக்காமல் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போது என்னைக் கவர நீ ஓர் இறைச்சித் துண்டைப் போட்டாயோ.. அப்போதே நீ கயவனென்றறிந்தேன். ஆகவேதான் உன்னைத் துரத்தினேன்’ என்று சொன்னதாம்!

ஆக ‘தன்னை மயக்க இறைச்சித் துண்டைப் போட்டாலும் சுதாரித்துக் கொண்ட நாயைப் போல நீங்கள் மாற வேண்டும்’ என்றார் பாரதி கிருஷ்ணகுமார்.

.


இன்றைய அரசியலோடு இந்த இரண்டு கதைகளையும் பொருத்திப் பார்த்து பொருத்தமான இடங்களிலெல்லாம் கைதட்டி பேச்சாளரை திக்குமுக்காட வைத்துவிட்டனர் மக்கள்.


.

Sunday, April 3, 2011

What a Moment!!!





April 2 2011 - சனிக்கிழமை இரவு. மறக்க முடியாத மேட்ச்! இந்தியா கையில் கோப்பை!

கோப்பையை வென்றதன் மூலம் பலரின் வாயை அடைத்துவிட்டார் தோனி!

பலர் என்று நான் சொல்வது எதிர் நாட் டு அணியையோ எதிர் நாட்டின் பத்திரிகையையோ அல்ல. நம்ம கூடவே இருந்துட்டு இவனுக ஆகாதுப்பா என்று புலம்புபவர்களைத்தான்!

ஏற்கனவே ஆஸியை ஜெயிச்சப்பவே, இதுக்காக ஒரு போஸ்ட் போட்டு பொங்கீட்டேன். பாகிஸ்தான் கிட்ட உங்க பப்பு வேகாதுன்னாங்க.. அதுக்கும் ஆப்பு வெச்சாச்சு. மறுபடி இலங்கைகூட ஃபைனல்ஸ்ன்னப்ப, 40%தான் இந்தியாவுக்கு சான்ஸ்னாங்க.. கோவப்பட்டு, மேட்சுக்கு முன்னாடியே இந்த போஸ்டைப் போட்டேன். அதுக்கும் பேராசைன்னாங்க!

மார்ச் 31 அன்னைக்கு ட்விட்டர்ல 'எல்லார்க்கும் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1. இலங்கைக்கு மட்டும் ஏப்ரல் 2’ன்னு எழுதினேன். யாரோ வந்து திட்டினாங்க.

இப்ப என்னாச்சு? சொல்லி அடிச்சோம்ல?

------------- ---------------- ------------------

தோனி!



(ஜனாதிபதி மாளிகையில் ஆட்டநாயகன் விருது + கோப்பையுடன்)


சிலர் பேசறாங்க. இவர் விளையாடாத கேப்டன்னு. தேவையே இல்லைப்பா. மேன் மேனேஜ்மெண்ட்னு ஒரு விஷயம் நான் இவர்ட்டேர்ந்து கத்துகிட்டேன். என்னா கூல்!

கீழ பாருங்க..




வின்னிங் ஷாட் அடிச்சுட்டாரா? கண்ல ஏதாவது வெறி தெரியுதா? ஒரு சின்ன ஆர்ப்பாட்டம்? ம்ஹூம்.


சரி.. இந்த ஸ்டில் பாருங்க..




பந்து சிக்ஸுக்கு போயாச்சு. யுவிக்கு தெரிஞ்சுடுச்சு. இது லைஃப் டைம் ஷாட்ன்னு. ஆனா இப்பவும் தோனி முகத்துல ஆரவாரம் இல்லை. அர்ஜூனன்யா அவன். பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!


இதுவரைக்கும்கூட ஓகே-ங்க..


இப்ப இந்த ஸ்டில் பாருங்க..





சிக்ஸும் அடிச்சாச்சு. மேட்சும் ஜெயிச்சாச்சு. யுவியால அடக்க முடியல.. ‘இப்பக் கூட கத்தமாட்டியாடா நீ’ங்கற மாதிரி தோனியைப் பார்த்து கேட்கற மாதிரியே இருக்கா?

ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. மனுஷனாய்யா இவன்? லவ் யூ மேன்!


-------------------------

சச்சின்!

21 வருஷத்துக்கு மேல ஆடிகிட்டிருக்கற ரன்மெஷின். ஆனா ரொம்ப பாவம்.








சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!

ஃபைனல்ஸ்ல சச்சின் அவுட் ஆனப்ப என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரே கூப்ட்டு திட்டினாங்க.. அட.. கவலைப்படாதீங்கப்பா.. இன்னும் நாலு விக்கெட் விழுந்தாலும் ஜெயிக்கும்ன்னேன். சச்சினை நம்பி மட்டுமே இருக்கற டீம் இல்ல இது.

யோசிச்சுப் பாருங்க.. எதிரணி எப்படி வியூகம் அமைச்சிருப்பாங்க. சச்சின், சேவக்கை தூக்கிட்டா கப்பைக் கடத்தீட்டுப் போய்டலாம். மிடில்ல யுவராஜை கழட்டிவிட்டா போதும்’ இப்படித்தானே நினைச்சிருப்பாங்க. அவங்க நெனைச்சே பார்க்காத காம்பீர் ஆடினது அன்னைக்கு சர்ப்ரைஸ். அதே மாதிரி, விராட் கோஹ்லி அவுட் ஆனதும் யுவி வந்து சடார்னு ஒரு விக்கெட் விழுந்தாலும் கொஞ்சம் கஷ்டமா போயிருக்கும். அதான் சடார்னு ஒரு டவுன் முன்னாடி வந்து மிரட்டீட்டாரு தோனி.

அந்த முடிவு சரியா அமைஞ்சு மேட்ச் ஜெயிச்சதால ஓகே. இல்லைன்னா? தோனி பேசும்போது சொன்னது செம! ‘ஏன் அஸ்வினுக்கு பதிலா ஸ்ரீசாந்த்? ஏன் நீ ஒரு டவுன் முன்னாடி இறங்கின’ங்கறா மாதிரி கேள்விகள் வரக்கூடாதேன்னு பொறுப்பா ஆடினேன்னு சொன்னாரு.

சச்சின் ரிடயர்மெண்டாம்! அடப்பாவிகளா.. அதுக்கு வேலையே இல்லையே.. இத்தனை வருஷமா ஆடிகிட்டிருந்தாலும், பாருங்க.... இந்த சீரிஸ்லயும் சொச்ச ரன் வித்யாசத்துல இரண்டாமிடம் பிடிச்சிருக்காரு. சச்சின் சிங்கிள்ஸ் எடுக்கறதையும், பவுண்டரியைத் தடுக்கறதையும் பார்த்தா வயசு தெரியுது உங்களுக்கு?





இந்த வெற்றில சச்சினுக்கு கண்டிப்பா பங்கிருக்கு. அவருக்கு நம்மளால கோடி, லட்சமெல்லாம் தரமுடியாது. எனக்காக ஒரே ஒரு உறுதிமொழியைத் தாங்க.

சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13. பல முறை சொல்லியாச்சு. அடிக்கடி நூறு அடிக்கறதால, தோக்கற மேட்ச்தான் உங்களுக்கு வலியா நினைவில இருக்கு. அதுவும் சமீபமா சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..

யுவராஜ், ஜாகிர்ன்னு இன்னும் பலபேரைப் பத்தி பலதும் எழுதலாம். சச்சினைத் தூக்கி தோள்ல வெச்சுட்டு சுத்தினாங்க பாருங்க... எவ்ளோ முக்கியமான தருணம் அது.

ஒரு விஷயம் தெரியுமா? 21 வருஷமா விளையாடறாரே தவிர, பெரிய டோர்ணமெண்ட் கப் எதுவும் சச்சின் கைல வாங்கிப் பாத்ததில்லை. அதாவது 4, 5 டீமுக்கு மேல விளையாடற டி20 கப், ஐ பி எல், சாம்பியன்ஸ் ட்ராஃபின்னு எதுவும் சச்சின் இருக்கறப்ப ஜெயிச்சதில்லை. அவ்ளோ தூரம் விளையாண்டு, உழைப்பைக் கொட்டியும் இவருக்கு சரியான டீம் மேட்ஸ் இந்த தடவைதான் அமைஞ்சிருக்கும்பேன் நான். அந்த வெறிதான் நேத்து. சச்சின் கைல கப்பை கொடுத்த ஒவ்வொருத்தரையும் நான் நமஸ்கரிக்கறேன்.

------------------

அடுத்த அதிரடி ஐ பி எல் ஆரம்பம். வழக்கம்போல நான் CSK பக்கம்.

ஆனா - கீழ இருக்கற மாதிரி சூழல்கள்ல மட்டும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அப்ப மட்டும் நான் க்ரிக்கெட்டின் ரசிகன்!






நீங்க IPLல யார் பக்கம்?

.

Friday, April 1, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?





டேய்... கெளம்பு.. கெளம்பு.. பார்ட்டிக்கு நேரமாச்சு..

------------------------




மச்சி.. தொட்டுப் பாரேன்.. சந்தோஷத்துல எப்படித் துடிக்குதுன்னு...


---------------




யேய்ய்ய்ய்.. கிறுக்கனுக.. சேவக்குக்கு இப்படி பால் போட்டா அடிக்காம என்ன பண்ணுவான்?


-----------------------



தோனி.. CUPதான் குடுக்க மாட்டேன்னுட்ட... கையாவது குடுய்யா...

-----------------------



மலிங்க: வந்ததுக்கு டீயும் ரெண்டு பிஸ்கெட்டும் மிச்சம்ன்னு திங்கறதப் பாரு...

--------------------



சங்ககாரா: தனியாப்போகாம - நின்னு - கூட்டீட்டுப் போற பாரு அஃப்ரிடி.. நண்பேண்டா!

----------------




இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சச்சின்?




ஜெயிக்கப் பிறந்த இந்திய அணியையும், இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியையும் வாழ்த்துகிறேன்.



.